Pages

காலிப்ளவர் ட்ரை


தேவையான பொருட்கள்:
  1. காலிஃப்ளவர் - 1
  2. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  3. உப்பு - 1ஸ்பூன்
  4. கார்ன்மாவு - 4 ஸ்பூன்
  5. மைதா - 2 ஸ்பூன்
  6. அரிசிமாவு - 2ஸ்பூன்
  7. கேசரிகலர் - 1 பின்ச்
  8. எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
  1. காலிப்ளவர் சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அகலமான பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு கொதி வந்ததும் காலிஃப்ளவர், உப்பு சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். (உடனே அடுப்பை அணைத்து விடவும். நன்கு வெந்து விட்டால் க்ரிஸ்பியாக வராது).
  3. வடிதட்டில் நீர் வடிய விடவும். பின் எல்லா மாவையும், மிளகாய் தூள், உப்பு, கேசரி கலர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவைப்போல கலந்துகொளவும்.
  4. அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சூடேறியதும் காலிஃப்ளவரை பஜ்ஜி கலவையில் போட்டுஎடுத்து காலிப்ளவரை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். 






vegetable ஃப்ரை ரைஸ்


தேவையான பொருட்கள்:
  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 3
  4. இஞ்சி - சிறிது
  5. முட்டகோஸ் - 1/2 கப்
  6. கேரட் -1/2 கப்
  7. பீன்ஸ் -1/2 கப்
  8. குடைமிளகாய் -1/2 கப்
  9. பச்சைபட்டாணி - 1/2 கப்
  10. பச்சைமிளகாய் - 3
  11. சோயா சாஸ் - 1 ஸ்பூன்
  12. சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
  13. எண்ணெய் - 3ஸ்பூன்
  14. உப்பு - 1ஸ்பூன்
  15. மிளகுதூள் -1/2 ஸ்பூன்
  16. வெங்காயதாள் - சிறிது


செய்முறை :



  1. பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து வடித்துகொள்ளவும்.
  2. காய்களை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் உற்றி சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. அதில் பொடியாக நறுக்கிய காய்களை போட்டு வதக்கவும். பாதி வெந்ததும்சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும். 
  5. பின் அதில் பாஸ்மதி சாதத்தை சேர்த்து கிளறவும். மிளகு தூள் தூவி நன்கு கிளறவும்.
  6. வெங்காய தாள் தூவி பரிமாறவும்.

இறால் தம் பிரியாணி

தேவையான பொருட்கள் :

  1. பாஸ்மதிஅரிசி - 2 கப்
  2. இறால் - 11/2கப்
  3. தக்காளி - 1
  4. வெங்காயம் - 2
  5. பச்சை மிளகாய் - 4
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
  9. தனியாதூள் - 1 ஸ்பூன்
  10. பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
  11. எண்ணெய் - 4 ஸ்பூன்
  12. நெய் -2 ஸ்பூன்
  13. பட்டை - 1
  14. கிராம்பு - 2
  15. பிரிஞ்சிஇலை - 2
  16. ஏலக்காய் - 2
  17. உப்பு - 2 ஸ்பூன்
  18. புதினா -சிறிது
  19. கொத்தமல்லி - சிறிது
  20. கருவேப்பிலை - சிறிது

செய்முறை :

  1. பாத்திரத்தில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலை போட்டு கிளறவும்.
  2. பொரிந்ததும் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. அதில் இறால் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் உற்றி வேக விடவும்.
  6. வெந்து எண்ணெய் மேலே வந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டுதட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து தம்மில் வைக்கவும்.
  7. 20நிமிடம் களித்து நெய் மேலே உற்றி கிளறி பரிமாறவும். சுவையான இறால் பிரியாணி ரெடி.

வாழைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :

  1. வாழைக்காய் - 2
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
  4. கடலை பருப்பு -1/4 ஸ்பூன்
  5. கருவேப்பிலை - சிறிது
  6. க.மிளகாய் - 3
  7. உப்பு - 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. எண்ணெய் - 2 ஸ்பூன்
  11. தேங்காய் துருவல்- சிறிது

செய்முறை :

  1. வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. கடாயில் எண்ணை விட்டு கடுகு,கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் சிறிதாக வெட்டிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. வதங்கியதும் வாழைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து சிம்மில் மூடி போட்டு வேகவிடவும்.
  4. வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும், வாழைக்காய் பொரியல் ரெடி.


கத்திரிக்காய் தொக்கு

தேவையான பொருட்கள் :

  1. கத்தரிக்காய் - 6
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. உப்பு-1 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  7. கரம்மசாலா-1 /2 ஸ்பூன்
  8. பூண்டு - 2 பல்
  9. சோம்பு-1 ஸ்பூன்
  10. எண்ணெய் - 3 ஸ்பூன்
  11. கருவேப்பிலை -சிறிது
  12. கொத்தமல்லி இலை-சிறிது

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை,சோம்பு தாளித்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் நீளவாக்கில் வெட்டிய கத்தரிகாயை சேர்த்து வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள்,கரம்மசாலா , மிளகாய்த்தூள், உப்பு, சிறிதுதண்ணீர்சேர்த்து  கிளறிமூடி வைக்கவும்.
  4. நன்கு வெந்துஎண்ணெய் பிரியும் வரை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.
  5. சுவையான கத்திரிக்காய் தொக்கு ரெடி.

சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள் :

  1. பரோட்டா - 5
  2. வெங்காயம் - 2 
  3. கொடமிளகாய் - 2
  4. சில்லிசாஸ் - 1 ஸ்பூன்
  5. தக்காளி சாஸ் -1ஸ்பூன்
  6. சோயாசாஸ் -1/ 2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் -1ஸ்பூன்
  8. உப்பு -1ஸ்பூன்
  9. எண்ணெய் -4 ஸ்பூன்
  10. கொத்தமல்லி-சிறிது


செய்முறை :

  1. முதலில்பரோட்டா சமைத்து அதை Cube வடிவில் வெட்டி கொள்ளவும்.
  2. ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் உற்றி சூடேறியதும் வெங்காயம், கொடமிளகாய் போட்டு வதக்கவும்.
  3. பாதி வதங்கியதும் சில்லிசாஸ்,தக்காளி சாஸ்,சோயாசாஸ், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
  4. அதனுடன் சிறிது தண்ணீர் உற்றி கிளறவும். வெங்காயம், கொடமிளகாய் வெந்ததும் அதனுடன் வெட்டி வைத்த பரோட்டா சேர்த்து கிளறி கொத்தமல்லி போட்டு தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

கோவக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :
  1. கோவக்காய் - 1/4 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 3 பல்
  4. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  6. தனியா தூள் - 1/2 ஸ்பூன்
  7. எண்ணெய் - 2 ஸ்பூன்
  8. உப்பு - 1 ஸ்பூன்
  9. கடுகு - 1/4 ஸ்பூன்
  10. கருவேப்பிலை - சிறிது
  11. மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :

  1. கோவக்காய், வெங்காயம் சிறிதாக வெட்டிவைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு ,கருவேப்பில்லை போட்டு பொரிந்ததும் அதில் வெட்டிவைத்த வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் அதில் கோவக்காய் சேர்த்து நன்கு வதக்கவும், பாதி வெந்ததும் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின் சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
  4. வெந்ததும் மிளகு தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு வறுவல்


    தேவையான பொருட்கள் :
    1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
    2. கடுகு - 1 ஸ்பூன்
    3. உள்ளுதம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    4. சோம்பு - 1/4 ஸ்பூன்
    5. பூண்டு - 6 பல்
    6. இஞ்சி - சிறிது
    7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    8. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    9. தனியாதூள் - 1 ஸ்பூன்
    10. கருவேப்பிலை - சிறிது
    11. உப்பு - 1 ஸ்பூன்
    12. எண்ணெய் - 4 ஸ்பூன்
    செய்முறை :

    1. உருளைக்கிழங்கை வேகவைத்து நறுக்கி வைக்கவும்.
    2. பூண்டு, இஞ்சி, சோம்பு அரைத்து வைக்கவும்.
    3. கடாயில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உள்ளுதம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு, சோம்பு போட்டு வதக்கவும்.
    4. பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
    5. உருளைக்கிழங்கு நன்கு சிறு தீயில் வைத்து வறுக்கவும்.
    6. சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.



    அவரைக்காய் வறுவல்


    தேவையான பொருட்கள் :
    1. அவரைக்காய் - 1/4 கிலோ
    2. வெங்காயம் - 1
    3. மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
    4. தனியாதூள் - 1/2 ஸ்பூன்
    5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    6. எண்ணெய் - 2 ஸ்பூன்
    7. கடுகு - 1/4 ஸ்பூன்
    8. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    9. பூண்டு - 3 பல்
    10. கருவேப்பிலை - சிறிது
    11. உப்பு - 1 ஸ்பூன்
    செய்முறை :

    1. அவரைக்காய், வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு  பொரிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் அவரைக்காய் ,உப்பு சேர்த்து வதக்கி,பின்  மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள் சேர்த்து வதக்கி தீயை குறைத்து மூடி வேகவைக்கவும்.
    4. வெந்ததும் சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.

    பீன்ஸ் பொரியல்

    தேவையான பொருட்கள் :
    1. பீன்ஸ் - 1/4 கிலோ
    2. வெங்காயம் - 1
    3. காய்ந்த மிளகாய் - 2
    4. எண்ணெய் - 2 ஸ்பூன்
    5. கடுகு - 1/4 ஸ்பூன்
    6. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    7. கருவேப்பிலை - சிறிது
    8. தேங்காய் பூ- 1/4 கப்
    9. உப்பு - 1 ஸ்பூன்
    செய்முறை :


    1. பீன்ஸ், வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு,காய்ந்த மிளகாய் போடவும் பொரிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ்,உப்பு சேர்த்து வதக்கி தீயை குறைத்து மூடி வேகவைக்கவும்.
    4. வெந்ததும் தேங்காய் பூ சேர்த்து இறக்கவும்.சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி.

    இடியாப்பம்

    தேவையான பொருட்கள் :


    1. அரிசி மாவு - 2 கப்
    2. தண்ணீர் - 2 1/2 கப்
    3. உப்பு - 1 ஸ்பூன்
    செய்முறை :

    1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிடவும் , பின் அதை அரிசி மாவில் சேர்த்து நன்கு கட்டிபடாமல் கிளறவும்.
    2. பின் இடியாப்பம் பிழியும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் கிளறிய மாவை அதில் போட்டு இட்லி பாத்திரத்தில் பிழியவும்.
    3. பிழிந்த இடியாப்பத்தை இட்லி மூடி போட்டு நன்கு வேகவிடவும்.
    4. பின் சூடான இடியாப்பத்தை குருமா அல்லது தேங்காய் பால்,சர்க்கரை  சேர்த்து பரிமாறவும்.

    தேங்காய் சட்னி

    தேவையான பொருட்கள் :

    1. தேங்காய் - 1 கப்
    2. பச்சை மிளகாய் - 4
    3. பொட்டுகடலை - 1/2 கப்
    4. கடுகு - 1/4 ஸ்பூன்
    5. உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
    6. கருவேப்பில்லை - சிறிது
    7. உப்பு - 1/2 ஸ்பூன்
    8. எண்ணெய் - 1/2 ஸ்பூன்

    செய்முறை :

    1. முதலில் தேங்காய், பச்சைமிளகாய், பொட்டுகடலை, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
    2. பின் ஒரு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

    செட்டிநாடு மட்டன் குழம்பு

    தேவையான  பொருட்கள் : 


    1. மட்டன் - அரை கிலோ
    2. வெங்காயம் - 1
    3. தக்காளி - 1
    4. மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
    5. மிளகாய் பொடி - 2ஸ்பூன்
    6. தனியா பொடி - 3ஸ்பூன்
    7. பட்டை - 2
    8. கிராம்பு - 1
    9. சோம்பு - 1/2ஸ்பூன்
    10. வெந்தயம் - 1/2ஸ்பூன்
    11. கருவேப்பில்லை- சிறிது
    12. எண்ணெய் - 4 ஸ்பூன்


    அரைக்க தேவையானவை :


    1. மிளகு - 1ஸ்பூன்
    2. சீரகம் - 1ஸ்பூன்
    3. சோம்பு - 1ஸ்பூன்
    4. பூண்டு - 6 பல்
    5. இஞ்சி - ஒரு துண்டு
    6. உப்பு - 2 ஸ்பூன்


    செய்முறை :

    1. ஒரு குக்கரில் மட்டன் சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், தண்ணீர் உற்றி 5 விசில் விடவும்.
    2. ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
    3. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, வெந்தயம், கருவேப்பில்லை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
    4. சிறிது வதக்கி பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த மட்டன் போட்டு நன்கு கொதிக்க விடவும். 
    5. குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.

    பீட்ரூட் அல்வா

    தேவையான பொருட்கள் :

    1. துருவிய பீட்ரூட் - 1 கப்

    2. பால் - 2 கப்

    3. சர்க்கரை - 1/2 கப்

    4. நெய் - 4 ஸ்பூன்

    5. முந்திரி - 8
    6. ஏலக்காய் - 2 

    செய்முறை :

    1. ஒரு பாத்திரத்தில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடவும்.

    2. பீட்ரூட் வெந்ததும் பால் வற்றும் வரை கிளறவும்.

    3. பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

    4. அல்வா பதம் வர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

    5. பின் முந்தரி பருப்பு வறுத்து அதனுடன் சேர்க்கவும்.
    6. ஏலக்காய் பொடி செய்து சேர்த்து கிளறி பரிமாறவும்.

    புட்டு

    தேவையான பொருட்கள் :

    1. அரிசி மாவு - 2 கப்

    2. சர்க்கரை - 1 கப்

    3. ஏலக்காய் - 2

    4. துருவிய தேங்காய் - 1 கப்

    5. உப்பு - சிறிது
    6. நெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    1. அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறவும். 
    2. மாவு லேசாக ஈரப்பதத்துடன் உருண்டு வரும் போது குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி மாவை உதிர்த்து விட்டு கிளறி விடவும்.
    3. வேக வைத்த மாவுடன் சர்க்கரை , தேங்காய் துருவல், ஏலக்காய் , நெய் சேர்த்து கிளறி விடவும். 
    4. சுவையான புட்டு ரெடி. 

    அடை

    தேவையான பொருட்கள் :

    1. அரிசி - 1 கப்
    2. உளுத்தம் பருப்பு -1/4 கப்
    3. கடலை பருப்பு - 1/2 கப்
    4. துவரம் பருப்பு - 1/4 கப்
    5. க.மிளகாய் - 6
    6. சோம்பு - 1/4 ஸ்பூன்
    7. உப்பு - 2 ஸ்பூன்
    8. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
    தாளிக்க :
    1. துருவிய தேங்காய் -3 ஸ்பூன்
    2. கடுகு - 1/4 ஸ்பூன்
    3. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
    4. உள்ளுதம் பருப்பு - 1 ஸ்பூன்

    செய்முறை :

    1. 2 மணி நேரம் உறவைத்த அரிசி,பருப்பை க.மிளகாய்,மஞ்சள் தூள், சோம்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
    2. பின் கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம் பருப்பு , கடலை பருப்பு ,  துருவிய தேங்காய் வறுத்து மாவுடன் சேர்த்து கிளறவும்.
    3. தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    புளியோதரை

    தேவையான பொருட்கள்:

    1. சாதம் - 2 கப்
    2. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    3. கருவேப்பில்லை- சிறிது
    4. உப்பு - 2 ஸ்பூன்
    5. புளி - 1 கப் கரைத்தது
    6. வேர்கடலை -1 ஸ்பூன்
    7. கடுகு - 1/4 ஸ்பூன்
    8. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
    9. உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
    10. எண்ணெய் - 4 ஸ்பூன்
    வறுத்து அரைக்க :
    1. சீரகம் - 1/2 ஸ்பூன்
    2. கடலை பருப்பு - 2 ஸ்பூன்
    3. உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
    4. மிளகு - 1/2 ஸ்பூன்
    5. தனியா - 1/2 ஸ்பூன்
    6. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
    7. க.மிளகாய் - 8

    செய்முறை: 
    1. வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவிடவும். ஆறியதும் பொடியாகி கொள்ளவும்.
    2. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு கருவேப்பில்லை, க.மிளகாய், வேர்கடலை சேர்த்து பொரிந்ததும்அதில் கரைத்த புளி தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
    3. நன்கு கொதித்ததும் அரைத்த பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
    4. பின் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

    சக்கரை பொங்கல்

    தேவையான பொருட்கள் :

    1. பச்சரிசி  - 1 கப்
    2. சிறுபருப்பு - 1/4 கப் 

    3. வெள்ளம் - 1 1/2 கப்

    4. முந்திரி -10

    5. திராட்சை- 8

    6. நெய் - 5 ஸ்பூன்

    7. ஏலக்காய் - 4

    8. உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :


    1. cookerல் அரிசி,பருப்பு போட்டு 2 கப் தண்ணீர் உற்றி 5 விசில் விடவும்.

    2. ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் உற்றி நுணுக்கிய வெள்ளம் போட்டு கொதிக்க விடவும்.
    3. கொதித்ததும் அதை எடுத்து வெந்த சாதத்துடன் சேர்த்து, ஏலகாய் போட்டு  நன்கு கிளறவும்.

    4. கடாயில் நெய் உற்றி காய்ந்ததும் முந்திரி ,திராட்சையை சேர்த்து வறுத்து அதை கிளறிய சாதத்துடன் போட்டு சூடாக பரிமாறவும்.


    ரசகுலா


    தேவையான பொருட்கள் :

    • பால் - 4 கப்
    • லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
    • சக்கரை - 3 கப்
    • தண்ணீர் - 4 கப்
    • ஏலக்காய் பவுடர் - 1/4 ஸ்பூன் 


      செய்முறை:
      1. முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க விடவும்.
      2. நன்கு கொதிக்கும் போது அதில் லெமன் ஜூஸ் விட்டு திரியும் வரை கிளறவும்.
      3. நன்கு திரிந்ததும் அதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி தண்ணீர் ஈரும் வரை வைக்கவும். பின் அதில் இருந்து எடுக்கும் பன்னீர் நன்கு cold தண்ணீரில் அலசி அதை தண்ணீர் ஈரும் வரை வைக்கவும்.
      4. தண்ணீர் போனதும் அதை நன்கு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைக்கவும்.
      5. பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர்,ஏலக்காய் பவுடர் போட்டு கொதிக்க விடவும்.
      6. கொதிவந்ததும் அதில் செய்து வைத்து உள்ள பன்னீர் உருண்டைகளை போட்டு 15-20 நிமிடம் வேகவிடவும்.
      7. பின் ஆறவைத்து fridge ல் 4 மணி நேரம் வைத்து பரிமாறினால் சுவையான ரசகுலா ரெடி .

      ரசமலாய்


      தேவையான பொருட்கள் :
       
      • பால் - 4 கப்
      • லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
      • சக்கரை - 1 1/2 கப்
      • தண்ணீர் - 4 கப்
      • ஏலக்காய் பவுடர் - 1/4 ஸ்பூன்

      மலாய்கு தேவையானவை:
      • பால் - 3 கப் அல்லது 2 கப் (half and half )பால்
      • சக்கரை - 1 1/4 கப்
      • நறுக்கிய பாதாம் - 1 ஸ்பூன்
      • நறுக்கிய பிஸ்தா- 1ஸ்பூன்
      • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்

      செய்முறை :
      1. முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க விடவும்.
      2. நன்கு கொதிக்கும் போது அதில் லெமன் ஜூஸ் விட்டு திரியும் வரை கிளறவும்.
      3. நன்கு திரிந்ததும் அதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி தண்ணீர் ஈரும் வரை வைக்கவும். பின் அதில் இருந்து எடுக்கும் பன்னீர் நன்கு cold தண்ணீரில் அலசி அதை தண்ணீர் ஈரும் வரை வைக்கவும்.
      4. தண்ணீர் போனதும் அதை நன்கு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைக்கவும்.
      5. பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர்,ஏலக்காய் பவுடர் போட்டு கொதிக்க விடவும்.
      6. கொதிவந்ததும் அதில் செய்து வைத்து உள்ள பன்னீர் உருண்டைகளை போட்டு 15-20 நிமிடம் வேகவிடவும்.
      7. பின் அதில் இருந்து உருண்டைகளை உடையாமல் எடுத்து ஆற விடவும்.

      மலாய் செய்முறை:

      1. ஒரு பாத்திரத்தில் பாலை உற்றி கொதிக்கவிடவும். கொதிவந்ததும் சிறு தீயில் 10-12 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
      2. பின் அதில் சர்க்கரை,ஏலக்காய் பவுடர் போட்டு 3-5 நிமிடம் கொதிக்கவிடவும்.
      3. அதை 2 கப் பால் பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
      4. பாலை சிறிது ஆறவிட்டு அதில் பன்னீர் உருண்டைகளை போட்டு வெட்டிவைத்த பாதாம், பிஸ்தா துண்டுகளை போட்டு fridge ல் 5 மணி நேரம் வைக்கவும் 
      5. சுவையான ரசமலாய் தயார்.



      ஆட்டுகால் பாயா


      தேவையான பொருட்கள் :

      • ஆட்டுக்கால் - 6 கால்

      • வெங்காயம் - 2

      • தக்காளி - 1

      • இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்

      • கரம் மசாலா - 1/4 ஸ்பூன்

      • மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

      • சீரகத்தூள் - 1 ஸ்பூன்

      • மல்லித்தூள் - 2 ஸ்பூன்

      • மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்

      • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

      • எண்ணெய் - 4 ஸ்பூன்

      • கறிவேப்பிலை - சிறிது

      • பச்சை மிளகாய் - 2

      • தேங்காய் துருவல் - 6 ஸ்பூன்

      • உப்பு - 2 ஸ்பூன்
      • கொத்தமல்லி - சிறிது

      செய்முறை :

      1. ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது சிறிது, மஞ்சள் தூள் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 விசில்  விடவும். 
      2. ஒரு கடாயில் கருவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
      3. வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
      4. பின் அதில் மஞ்சள் தூள்,தனியாதூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா, சீரக தூள் சேர்த்து வதக்கி அதில் வேக வைத்துள்ள மட்டன் கால் சேர்த்து கிளறவும்.
      5. அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
      6. கொதித்ததும் மிளகு தூள் , கொத்தமல்லி சேர்த்து கிளறி ஆப்பம், தோசையுடன் பரிமாறவும்.

      தம் சிக்கன் பிரியாணி

      தேவையான பொருட்கள் :
      1. சிக்கன் - அரை கிலோ
      2. பாஸ்மதி அரிசி - 3 கப்
      3. பட்டை - 2
      4. கிராம்பு -2
      5. பிரிஞ்சி இலை -2
      6. ஏலக்காய் -2
      7. பச்சை மிளகாய் -3
      8. பெரிய வெங்காயம் -2
      9. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
      10. புதினா - 1/2 கப் கொத்தமல்லி - 1/2 கப்
      11. தக்காளி -2
      12. எண்ணெய் - 4 கப்
      13. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
      14. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
      15. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
      16. தனியா தூள் - 2 ஸ்பூன்
      17. பிரியாணி மசாலா -2 ஸ்பூன்
      18. உப்பு -21/2 ஸ்பூன்
      19. நெய் - 2 ஸ்பூன்
      20. கேசரி கலர் - சிறிது
       செய்முறை 

        1. முதலில் ஒரு பேனில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும்ஏலக்காய் போட்டு வதக்கவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
        2. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
        3. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.அதில் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு மூடி கொண்டு அந்த பாத்திரத்தை மூடவும். சிக்கன் ல் இருந்து தண்ணீர் வந்ததும், அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி சிக்கன் வேகும் வரை மூடி வைக்கவும்.
        4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய், உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் உர வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும். 
        5. சிக்கன் வெந்ததும் அதை அடுப்பில் இருந்து எடுத்துஅதன் மேல்வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை ஸ்பூன் தண்ணீருடன் சேர்த்து ஊற்றி விடவும். அதன் மேல் நெய் ஊற்றி Aluminium Foil sheet போட்டு மூடி வைக்கவும்.
        6. அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி Pan வைத்து அடுப்பை சிம் செய்யவும். அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும். 
        இதே முறையில், சிக்கனுக்கு பதில், குக்கரில் நன்கு வேகவைத்த [5 - 6 விசில்] மட்டன் போட்டால் மட்டன் பிரியாணி ரெடி...வரும் பதிவுகளில், எளிய முறை பிரியாணி செய்வதைக் காண்போம்...









        மட்டன் பிரியாணி


        தேவையான பொருட்கள் :


        • மட்டன் - அரை கிலோ
        • பாஸ்மதி அரிசி - 3 கப்

        • பட்டை - 2
        • கிராம்பு -2
        • பிரிஞ்சி இலை -2
        • ஏலக்காய் -2
        • பச்சை மிளகாய் -3
        • பெரிய வெங்காயம் -2
        • இஞ்சிபூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
        • புதினா - 1/2 கப்
        • கொத்தமல்லி - 1/2 கப்
        • தக்காளி -2
        • எண்ணெய் - 4 கப்
          மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
          கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

        • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
        • தனியா தூள் - 2 ஸ்பூன்
        • பிரியாணி மசாலா -2 ஸ்பூன்
        • உப்பு -3 ஸ்பூன்

        • கேசரி கலர் - சிறிது
        • நெய் - 2 ஸ்பூன்


        செய்முறை 
        1. முதலில் ஒரு பேனில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காய் போட்டு வதக்கவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
        2. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
        3. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வேகவைத்த மட்டன்  துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.அதில் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு மூடி கொண்டு அந்த பாத்திரத்தை மூடவும். அதனுடன் அரை டம்ளர் வேகவைத்த மட்டன் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி விடவும்.
        4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒருபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலைஏலக்காய், உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் உர வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும். 
        5. மசாலா இருக்கும் பத்திரத்தை அடுப்பில் இருந்து எடுத்துஅதன் மேல் வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை தேக்கரண்டி ஸ்பூன் சேர்த்து ஊற்றி விடவும். அதன் மேல் நெய் ஊற்றி Aluminium Foil sheet போட்டு மூடி வைக்கவும்.
        6. அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி Pan வைத்து அடுப்பை சிம் செய்யவும். அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும். 

        மட்டன் குழம்பு

        தேவையான பொருட்கள் :
        1. மட்டன் - 1/2 கிலோ
        2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
        3. வெங்காயம் - 1
        4. தக்காளி -1
        5. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
        6. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
        7. தனியா தூள் - 1 ஸ்பூன்
        8. பச்சை மிளகாய் - 2
        9. கொத்தமல்லி - சிறிது
        10. கருவேப்பிலை - சிறிது
        11. எண்ணெய் - 4 ஸ்பூன்
        12. பட்டை - 2
        13. கிராம்பு - 2
        14. பிரிஞ்சி இலை - 2
        15. சோம்பு - 1/4 ஸ்பூன்
        16. உப்பு - 1 ஸ்பூன்
        17. தேங்காய் துருவல் - 1 கப்
        செய்முறை :
        1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
        2. பொடியாக நறுக்கிய  வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
        3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
        4. பின் தக்காளி சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூள் ,உப்பு சேர்த்து வதக்கி அதில் மட்டன் சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
        5. பின் குக்கரை மூடி 6 விசில் விடவும்.
        6. குக்கரை திறந்து பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை அதில் சேர்க்கவும் நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி பூரி,சாதத்துடன் பரிமாறவும்.



        கொத்து பரோட்டா



        தேவையான பொருட்கள் :

        • பரோட்டா -3
        • முட்டை - 2
        • வெங்காயம் -2
        • தக்காளி -1
        • கொத்தமல்லி - சிறிதளவு
        • உப்பு -2 ஸ்பூன்
        • எண்ணெய் -4 ஸ்பூன்
        • இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
        • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
        • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
        • கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
        • தனியா தூள் - 1/2 ஸ்பூன்

        செய்முறை :

        1. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
        2. பின் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
        3. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் கரம் மசாலா,மஞ்சள்தூள், மிளகாய் தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் முட்டை உடைத்து ஊற்றி கிளறவும்.
        4. முட்டை பாதி வெந்ததும் தொக்கு போன்ற பதத்தில் வெட்டி வைத்த பரோட்டா துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.
        5. பின் கொத்தமல்லி தூவி சூடாக தயிர் ரைத்தாவுடன் பரிமாறவும்.

        மஷ்ரூம் ப்ரை

        தேவையான பொருட்கள் :

        1. மஷ்ரூம் - 8
        2. வெங்காயம் - 1
        3. இஞ்சிபூண்டு - 1 ஸ்பூன்
        4. மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
        5. தனியாதூள் - 1/2ஸ்பூன்
        6. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
        7. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
        8. உப்பு - 3/4ஸ்பூன்
        9. மிளகுதூள் - 1/2ஸ்பூன்
        10. எண்ணெய்- 1ஸ்பூன்


        செய்முறை :
        1. முதலில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
        2. பின் அதில் மஷ்ரூம் போட்டு வதக்கி அதில் மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.
        3. சிறிய தீயில் மூடி போட்டு வதக்கவும்.வெந்ததும் மிளகு தூள் போட்டு வறுத்து எடுக்கவும்.



        மீன் பிரியாணி

        தேவையான பொருட்கள் :


        1. பெரிய மீன் -6 துண்டுகள்
        2. பாசுமதி அரிசி - 3 கப்
        3. வெங்காயம் -2
        4. தக்காளி -1
        5. பச்சைமிளகாய்-2
        6. கொத்தமல்லி - சிறிது
        7. புதினா - சிறிது
        8. இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
        9. மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
        10. தனியாதூள் -3 ஸ்பூன்
        11. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
        12. பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
        13. எண்ணெய் - 6 ஸ்பூன்
        14. பட்டை - 2

        15. கிராம்பு - 2
        16. ஏலக்காய் - 2
        17. பிரியாணி இலை - 2
        18. உப்பு - 3 ஸ்பூன்


        செய்முறை :


        1. முதலில் ஒரு பாத்தரத்தில் மிளகாய் தூள் , தனியா தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள்  தூள் - 1/2 ஸ்பூன், இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்,உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் உறவிடவும்.
        2. பின்பு அதை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மீன்களை வறுத்து எடுக்கவும்.
        3. பின் இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் உற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிந்ததும் அதில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
        4. வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
        5. பின் அதில் தக்காளி போட்டு வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
        6. 10 நிமிடம் களித்து அதில் வருத்த மீன் துண்டுகளை போட்டு, மீன் உடையாமல் கிளறி விடவும்.
        7. பின் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு காற்று போகாத மூடி போட்டு மூடிவைக்கவும்.
        8. தம் முறையில் அரை மணி நேரம் பிறகு மீன் உடையாமல் கிளறவும்.

        குறிப்பு :

        தம் முறை : ஒரு தவா சூடு பண்ணி அதை சிறிய தீயில் வைத்து அதன் மேல் மூடிய பிரியாணி பாத்திரத்தை வைக்கவும்.

        மீன் ரோஸ்ட்

        தேவையான பொருட்கள்:

        1. மீன் - 4 துண்டுகள்
        2. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
        3. எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
        4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
        5. தனியாதூள் - 1 ஸ்பூன்
        6. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
        7. எண்ணெய் - 3 ஸ்பூன்
        8. உப்பு - 1 ஸ்பூன்


        செய்முறை :

        1. ஒரு பாத்திரத்தில் மீனை தவிர அனைத்து பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும்.
        2. மீன் துண்டுகளை, பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
        3. பின்பு ஒரு தவாவில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு சிறு தீயில் வருத்து எடுக்கவும்.

        முட்டை ஃப்ரைட் ரைஸ்



        தேவையான பொருட்கள் :
        1. பாஸ்மதிசாதம் - 2 கப் (உதிரியாக)
        2. வெங்காயம் - 1
        3. கேரட் - 1
        4. பீன்ஸ் - 5
        5. முட்டை - 2
        6. முட்டைகோஸ் - 1/2 கப்
        7. சோயா சாஸ் - 1 ஸ்பூன்
        8. தக்காளி சாஸ் -1 ஸ்பூன்
        9. மல்லி இலை - சிறிது
        10. பச்சை மிளகாய் - 2
        11. பச்சை பட்டாணி - 1/4 கப்
        12. எண்ணெய் - 3ஸ்பூன்
        13. உப்பு - 1 ஸ்பூன்
        14. மிளகுதூள்- 1 ஸ்பூன் 
        செய்முறை :
        1. வெங்காயம்,கேரட்,முட்டைகோஸ்,பீன்ஸை சிறிதாக அல்லது  நீளவாக்கில் வெட்டவும்.மிளகாயை சிறியதாக வெட்டவும்.
        2. முட்டையை ஒரு கப்பில் கலக்கி வைக்கவும்.
        3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.
        4. அதனுடன் கேரட்,முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் அளவு வதக்கவும்.
        5. வதங்கியதும் அதை ஒரு ஓரமாக கடாயில் ஒதுக்கிவிட்டு முட்டையை ஊற்றவும்.
        6. முட்டை வெந்தபின் அதை கொத்திவிட்டு அதில் பட்டாணி,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
        7. பின்பு அதில் தக்காளிசாஸ்,சோயா சாஸ்,உப்பு சேர்த்து கலக்கவும்.இதில் உதிரியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு மிளகுதூள் தூவி பிரட்டி எடுக்கவும்.சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.

        குறிப்பு


        சிக்கன்ஃப்ரைட் ரைஸ் அல்லது இறால்ஃப்ரைட்ரைஸ் வேண்டுமென்றால் அதில் சிக்கன் அல்லது இறால் துண்டுகளை பொரித்து சேர்த்து கிளறவும்.

        ரவாகிச்சடி

         தேவையான பொருட்கள் :


        • ரவா - 2 கப்
        • வெங்காயம் - 1
        • கேரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கியது - 1 கப்
        • பச்சை பட்டாணி - 1/4 கப்
        • இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
        • தக்காளி - 1
        • கிராம்பு, பட்டை.பிரிஞ்சி இலை- 2
        • பச்சைமிளகாய் - 3
        • எண்ணெய் - 3 ஸ்பூன்
        • உப்பு - 1 ஸ்பூன்
        • மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
        • சோம்பு - 1/4 ஸ்பூன்
        செய்முறை :

        1. கடாயில் எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை தாளிக்கவும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட்,தக்காளி, காய்கறி சேர்த்து வதக்கவும்.

        2. ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் அளந்து அத்துடன் சேர்த்து கொதிக்கவைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.

        3. ரவையை கொட்டி கிளறவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தூவி கிளறவும்.

        4. சுவையான கிச்சடியை சட்னியுடன் பறிமாறவும்.
        குறிப்பு:
        ரவை கொட்டி கிளரும் போது சிறுதீயில் வைத்து சமைக்கவும்.

        ரவா உப்புமா

        தேவையான பொருட்கள்:

        1. ரவை - 2 கப்
        2. பச்சைமிளகாய் - 3
        3. வெங்காயம் -1
        4. கருவேப்பிலை -சிறிது
        5. கடுகு-1/2 ஸ்பூன்
        6. உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
        7. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
        8. உப்பு - 1 ஸ்பூன்
        9. எண்ணெய்- 3 ஸ்பூன்

        செய்முறை:

        1. முதலில் கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு பொரிந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
        2. வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் உற்றி கொதிவந்ததும் உப்பு சேர்த்து ரவை போட்டு கிளறவும்.
        3. அடுப்பின் தீயை குறைத்து மூடிவைத்து வேகவிடவும். சூடான உப்புமா ரெடி.
        குறிப்பு : உப்புமா உதிரியாக வேண்டும் என்றால் தண்ணீர் 1 கப் ஊற்றவும்.

        தேங்காய் சாதம்

        தேவையான பொருட்கள் :

        • உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
        • எண்ணெய் - 2 ஸ்பூன்
        • கடுகு - 1/2 ஸ்பூன்
        • உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
        • கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
        • சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
        • இஞ்சி -சிறிது
        • க.மிளகாய் - 4
        • கறிவேப்பிலை - சிறிது
        • முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
        • தேங்காய் துருவல் - 1/2 கப்
        செய்முறை : 


        1. எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு  சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி, க.மிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை,தேங்காய் துருவல் சேர்த்து ஒரே ஒரு நிமிடம் வதக்கவும்.

        2. எதுவும் நிறம் மாற தேவையில்லை. பிறகு தீயை அணைத்து விட்டு உடன் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.

        வெஜிடபிள் பிரியாணி

        தேவையான பொருட்கள் : 


        • நெய் - 2 ஸ்பூன்
        • எண்ணெய் - 2 ஸ்பூன்
        • பாசுமதி அரிசி - 1 1/2 கப்
        • சோம்பு -1/2 கப்
        • பட்டை, ஏலக்காய் - 3
        • வெங்காயம் - 1
        • மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
        • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்'
        • கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
        • தக்காளி - 1
        • இஞ்சி,பூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
        • கொத்தமல்லி - சிறிது 

        • பீஸ், கேரட், பீன்ஸ்,உருளைகிழங்கு பொடியாக நறுக்கியது - 1 கப்

        செய்முறை : 


        1. அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து விடவும். எண்ணெய் ,நெய்யை காயவைத்து சோம்பு, பட்டை, ஏலம் போட்டு பொரிய விட்டு, பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
        2. இளம் பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
        3. தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும். காய்கறிகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி.மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
        4. கொதித்ததும் அரிசியை போட்டு 2 விசில் விடவும்.
        5. சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி.
        குறிப்பு :

        இதே முறையில் Electric cooker ல் செய்யலாம்.

         

        பொங்கல்

        தேவையான பொருட்கள்:


        • பச்சரிசி -2 கப்
        • பாசிபருப்பு -3/4 கப்
        • இஞ்சி- சிறிது
        • சீரகம் -1/2 ஸ்பூன்
        • மிளகு -1/2 ஸ்பூன்
        • கருவேப்பிலை- சிறிது
        • நெய்-3 ஸ்பூன்
        • உப்பு - 1 ஸ்பூன்
        • பெருங்காயம் - சிறிது
        • முந்தரி பருப்பு - 10
        செய்முறை : 


        1. அரிசியையும் பாசிபருப்பையும் நன்றாக அலசி குக்கரில் 5 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து 4 விசில் வர வரை வேகவைக்கவும்.


        2. கடாயில் நெய் ஊற்றி அதில் சீரகம், மிளகு சேர்த்து கருவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும், பின்பு முந்தரி பருப்பு வதக்கவும்.


        3. பொங்கல் நன்றாக குலைந்து வந்து இருக்கும் அதனுடன் தாளித்தவற்றை சேர்த்து கிளறவும்.


        4. பொங்கல் ரெடி ..சாம்பார்,வடையுடன் பரிமாறவும்.



        வாங்கி பாத்

        தேவையான பொருட்கள் :


        1. எண்ணெய் - 2 ஸ்பூன்
        2. கடுகு - 1 ஸ்பூன்
        3. பெருங்காயம் - சிறிதளவு
        4. கறிவேப்பிலை - சிறிது
        5. உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
        6. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
        7. நீளமான பச்சை கத்தரிக்காய் - 250 கிராம்
        8. வடித்த சாதம் - 3 கப்
        9. உப்பு - 1 ஸ்பூன்
         
        வறுத்து அரைக்க:

        1. சீரகம் - 1 ஸ்பூன்
        2. பட்டை -2
        3. கிராம்பு -2
        4. எள்ளு - 2 ஸ்பூன்
        5. கசகசா -1 ஸ்பூன்
        6. தனியா - 2 ஸ்பூன்
        7. காய்ந்த மிளகாய் - 4
        8. உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
        9. கடலை பருப்பு -1 ஸ்பூன்
        10. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

        செய்முறை : 

        1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
        2. எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு.
        3. அதில் கடைசியில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
        4. கத்தரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.
        5. ஆறிய உதிரியான சாதத்துடன் இந்த கலவையை போட்டு நன்கு பிரட்டினால் சுவையான வாங்கி பாத் ரெடி.


        கேரட் சாதம்

        தேவையான பொருட்கள் :
        1. துருவிய கேரட் - ஒரு கப்
        2. பச்சை மிளகாய் -3
        3. வெங்காயம் - 1
        4. கறிவேப்பிலை - சிறிது 
        5. கடுகு - 1/2 ஸ்பூன்

        6. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
        7. உப்பு - 1 ஸ்பூன்
        8. வடித்தசாதம் - 3 கப்
         செய்முறை :



        1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும்.
        2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் துருவிய கேரட்,உப்பு சேர்த்து வதக்கவும்.
        3. நன்கு வெந்ததும் சாதம்,கொத்தமல்லி தூவி கிளறவும்.

        தக்காளி சாதம்

         தேவையான பொருட்கள் :
        1. தக்காளி - 2
        2. வெங்காயம் -1
        3. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

        4. தனியா தூள் -1 ஸ்பூன்
        5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
        6. உப்பு - 1 ஸ்பூன்
        7. எண்ணெய் - 3 ஸ்பூன்

        8. பச்சை மிளகாய் - 2
        9. கடுகு - 1 ஸ்பூன்
        10. உள்ளுதம்பருப்பு - 1/4 ஸ்பூன்
        11. கடலைபருப்பு - 1/4 ஸ்பூன்
        12. சீரகம் - 1/4 ஸ்பூன்

        13. பூண்டு - 4
        14. சாதம் - 2 கப்

        செய்முறை:
        1. முதலில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உள்ளுதமப்ருப்பு,கடலை பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
        2. வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
        3. பின்பு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் அரை கப் தண்ணீர் உற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
        4. அதனுடன் வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.

        தேங்காய்பால் சாதம்

        தேவையான பொருட்கள்:
        1. பாசுமதி அரிசி - 2 கப்
        2. தேங்காய் பால் - 2 கப்
        3. தண்ணீர் - 1 1/2 கப்
        4. வெங்காயம் - 1
        5. தக்காளி - 1
        6. பச்சை மிளகாய் - 3
        7. இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
        8. பட்டை - 1
        9. கிராம்பு - 3
        10. பிரிஞ்சி இலை - 2
        11. சோம்பு - 1/4  ஸ்பூன்
        12. சீரகம் - 1/4  ஸ்பூன்
        13. கரம் மசாலா - 1 ஸ்பூன்
        14. கறிவேப்பிலை - சிறிதளவு
        15. எண்ணெய் - 3 ஸ்பூன்
        16. உப்பு - 1 ஸ்பூன்

        செய்முறை :

        1. முதலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம் போட்டு பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
        2. அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். 
        3. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
        4. அதனுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.
        5. இப்போது பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து பின்னர் இறக்கி விடவும்.
        6. சுவையான ஈசி தேங்காய் பால் சாதம் ரெடி.



        முட்டை பிரியாணி

        தேவையான பொருட்கள் :


        1. முட்டை - 4
        2. பாஸ்மதிஅரிசி-3 கப்
        3. பட்டை -2
        4. கிராம்பு -2
        5. பிரிஞ்சி இலை -2
        6. ஏலக்காய் -2
        7. பச்சை மிளகாய் -2
        8. பூண்டு - 10 பல்
        9. இஞ்சி - சிறிது
        10. வெங்காயம்-3
        11. புதினா - 1/4 கப்
        12. கொத்தமல்லி -1/4 கப்
        13. தக்காளி - 2
        14. எண்ணெய் - 6 ஸ்பூன்
        15. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
        16. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
        17. மிளகாய் தூள் - 2ஸ்பூன்
        18. தனியா தூள் - 1ஸ்பூன்
        19. பிரியாணி மசாலா -2 ஸ்பூன்
        20. உப்பு - 2 ஸ்பூன்
        21. கேசரி கலர் பொடி - சிறிது
        22. நெய் - 2 ஸ்பூன்


        செய்முறை
        1. முதலில் ஒரு பேனில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும்ஏலக்காய் போட்டு வதக்கவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
        2. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
        3. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வேகவைத்த  முட்டை இரண்டு துண்டுகளாக போட்டு நன்கு கிளறவும். அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி வைக்கவும்.
        4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒருபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை,ஏலக்காய், உப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் உர வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும். 
        5. கிளறி வைத்த முட்டை மசாலா மேல்வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை தேக்கரண்டி தண்ணீருடன் சேர்த்து ஊற்றி விடவும். அதன் மேல் நெய் ஊற்றி Aluminium Foil sheet போட்டு மூடி வைக்கவும்.
        6. அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி Pan வைத்து அடுப்பை சிம் செய்யவும். அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும்.