Pages

ரசகுலா


தேவையான பொருட்கள் :

  • பால் - 4 கப்
  • லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
  • சக்கரை - 3 கப்
  • தண்ணீர் - 4 கப்
  • ஏலக்காய் பவுடர் - 1/4 ஸ்பூன் 


    செய்முறை:
    1. முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க விடவும்.
    2. நன்கு கொதிக்கும் போது அதில் லெமன் ஜூஸ் விட்டு திரியும் வரை கிளறவும்.
    3. நன்கு திரிந்ததும் அதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி தண்ணீர் ஈரும் வரை வைக்கவும். பின் அதில் இருந்து எடுக்கும் பன்னீர் நன்கு cold தண்ணீரில் அலசி அதை தண்ணீர் ஈரும் வரை வைக்கவும்.
    4. தண்ணீர் போனதும் அதை நன்கு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைக்கவும்.
    5. பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர்,ஏலக்காய் பவுடர் போட்டு கொதிக்க விடவும்.
    6. கொதிவந்ததும் அதில் செய்து வைத்து உள்ள பன்னீர் உருண்டைகளை போட்டு 15-20 நிமிடம் வேகவிடவும்.
    7. பின் ஆறவைத்து fridge ல் 4 மணி நேரம் வைத்து பரிமாறினால் சுவையான ரசகுலா ரெடி .

    ரசமலாய்


    தேவையான பொருட்கள் :
     
    • பால் - 4 கப்
    • லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
    • சக்கரை - 1 1/2 கப்
    • தண்ணீர் - 4 கப்
    • ஏலக்காய் பவுடர் - 1/4 ஸ்பூன்

    மலாய்கு தேவையானவை:
    • பால் - 3 கப் அல்லது 2 கப் (half and half )பால்
    • சக்கரை - 1 1/4 கப்
    • நறுக்கிய பாதாம் - 1 ஸ்பூன்
    • நறுக்கிய பிஸ்தா- 1ஸ்பூன்
    • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்

    செய்முறை :
    1. முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க விடவும்.
    2. நன்கு கொதிக்கும் போது அதில் லெமன் ஜூஸ் விட்டு திரியும் வரை கிளறவும்.
    3. நன்கு திரிந்ததும் அதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி தண்ணீர் ஈரும் வரை வைக்கவும். பின் அதில் இருந்து எடுக்கும் பன்னீர் நன்கு cold தண்ணீரில் அலசி அதை தண்ணீர் ஈரும் வரை வைக்கவும்.
    4. தண்ணீர் போனதும் அதை நன்கு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைக்கவும்.
    5. பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர்,ஏலக்காய் பவுடர் போட்டு கொதிக்க விடவும்.
    6. கொதிவந்ததும் அதில் செய்து வைத்து உள்ள பன்னீர் உருண்டைகளை போட்டு 15-20 நிமிடம் வேகவிடவும்.
    7. பின் அதில் இருந்து உருண்டைகளை உடையாமல் எடுத்து ஆற விடவும்.

    மலாய் செய்முறை:

    1. ஒரு பாத்திரத்தில் பாலை உற்றி கொதிக்கவிடவும். கொதிவந்ததும் சிறு தீயில் 10-12 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
    2. பின் அதில் சர்க்கரை,ஏலக்காய் பவுடர் போட்டு 3-5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    3. அதை 2 கப் பால் பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
    4. பாலை சிறிது ஆறவிட்டு அதில் பன்னீர் உருண்டைகளை போட்டு வெட்டிவைத்த பாதாம், பிஸ்தா துண்டுகளை போட்டு fridge ல் 5 மணி நேரம் வைக்கவும் 
    5. சுவையான ரசமலாய் தயார்.



    ஆட்டுகால் பாயா


    தேவையான பொருட்கள் :

    • ஆட்டுக்கால் - 6 கால்

    • வெங்காயம் - 2

    • தக்காளி - 1

    • இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்

    • கரம் மசாலா - 1/4 ஸ்பூன்

    • மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

    • சீரகத்தூள் - 1 ஸ்பூன்

    • மல்லித்தூள் - 2 ஸ்பூன்

    • மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்

    • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

    • எண்ணெய் - 4 ஸ்பூன்

    • கறிவேப்பிலை - சிறிது

    • பச்சை மிளகாய் - 2

    • தேங்காய் துருவல் - 6 ஸ்பூன்

    • உப்பு - 2 ஸ்பூன்
    • கொத்தமல்லி - சிறிது

    செய்முறை :

    1. ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது சிறிது, மஞ்சள் தூள் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 விசில்  விடவும். 
    2. ஒரு கடாயில் கருவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
    4. பின் அதில் மஞ்சள் தூள்,தனியாதூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா, சீரக தூள் சேர்த்து வதக்கி அதில் வேக வைத்துள்ள மட்டன் கால் சேர்த்து கிளறவும்.
    5. அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
    6. கொதித்ததும் மிளகு தூள் , கொத்தமல்லி சேர்த்து கிளறி ஆப்பம், தோசையுடன் பரிமாறவும்.

    தம் சிக்கன் பிரியாணி

    தேவையான பொருட்கள் :
    1. சிக்கன் - அரை கிலோ
    2. பாஸ்மதி அரிசி - 3 கப்
    3. பட்டை - 2
    4. கிராம்பு -2
    5. பிரிஞ்சி இலை -2
    6. ஏலக்காய் -2
    7. பச்சை மிளகாய் -3
    8. பெரிய வெங்காயம் -2
    9. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
    10. புதினா - 1/2 கப் கொத்தமல்லி - 1/2 கப்
    11. தக்காளி -2
    12. எண்ணெய் - 4 கப்
    13. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
    14. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
    15. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    16. தனியா தூள் - 2 ஸ்பூன்
    17. பிரியாணி மசாலா -2 ஸ்பூன்
    18. உப்பு -21/2 ஸ்பூன்
    19. நெய் - 2 ஸ்பூன்
    20. கேசரி கலர் - சிறிது
     செய்முறை 

      1. முதலில் ஒரு பேனில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும்ஏலக்காய் போட்டு வதக்கவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
      2. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
      3. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.அதில் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு மூடி கொண்டு அந்த பாத்திரத்தை மூடவும். சிக்கன் ல் இருந்து தண்ணீர் வந்ததும், அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி சிக்கன் வேகும் வரை மூடி வைக்கவும்.
      4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய், உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் உர வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும். 
      5. சிக்கன் வெந்ததும் அதை அடுப்பில் இருந்து எடுத்துஅதன் மேல்வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை ஸ்பூன் தண்ணீருடன் சேர்த்து ஊற்றி விடவும். அதன் மேல் நெய் ஊற்றி Aluminium Foil sheet போட்டு மூடி வைக்கவும்.
      6. அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி Pan வைத்து அடுப்பை சிம் செய்யவும். அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும். 
      இதே முறையில், சிக்கனுக்கு பதில், குக்கரில் நன்கு வேகவைத்த [5 - 6 விசில்] மட்டன் போட்டால் மட்டன் பிரியாணி ரெடி...வரும் பதிவுகளில், எளிய முறை பிரியாணி செய்வதைக் காண்போம்...









      மட்டன் பிரியாணி


      தேவையான பொருட்கள் :


      • மட்டன் - அரை கிலோ
      • பாஸ்மதி அரிசி - 3 கப்

      • பட்டை - 2
      • கிராம்பு -2
      • பிரிஞ்சி இலை -2
      • ஏலக்காய் -2
      • பச்சை மிளகாய் -3
      • பெரிய வெங்காயம் -2
      • இஞ்சிபூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
      • புதினா - 1/2 கப்
      • கொத்தமல்லி - 1/2 கப்
      • தக்காளி -2
      • எண்ணெய் - 4 கப்
        மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
        கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

      • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
      • தனியா தூள் - 2 ஸ்பூன்
      • பிரியாணி மசாலா -2 ஸ்பூன்
      • உப்பு -3 ஸ்பூன்

      • கேசரி கலர் - சிறிது
      • நெய் - 2 ஸ்பூன்


      செய்முறை 
      1. முதலில் ஒரு பேனில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காய் போட்டு வதக்கவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
      2. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
      3. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வேகவைத்த மட்டன்  துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.அதில் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு மூடி கொண்டு அந்த பாத்திரத்தை மூடவும். அதனுடன் அரை டம்ளர் வேகவைத்த மட்டன் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி விடவும்.
      4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒருபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலைஏலக்காய், உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் உர வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும். 
      5. மசாலா இருக்கும் பத்திரத்தை அடுப்பில் இருந்து எடுத்துஅதன் மேல் வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை தேக்கரண்டி ஸ்பூன் சேர்த்து ஊற்றி விடவும். அதன் மேல் நெய் ஊற்றி Aluminium Foil sheet போட்டு மூடி வைக்கவும்.
      6. அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி Pan வைத்து அடுப்பை சிம் செய்யவும். அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும். 

      மட்டன் குழம்பு

      தேவையான பொருட்கள் :
      1. மட்டன் - 1/2 கிலோ
      2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
      3. வெங்காயம் - 1
      4. தக்காளி -1
      5. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
      6. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
      7. தனியா தூள் - 1 ஸ்பூன்
      8. பச்சை மிளகாய் - 2
      9. கொத்தமல்லி - சிறிது
      10. கருவேப்பிலை - சிறிது
      11. எண்ணெய் - 4 ஸ்பூன்
      12. பட்டை - 2
      13. கிராம்பு - 2
      14. பிரிஞ்சி இலை - 2
      15. சோம்பு - 1/4 ஸ்பூன்
      16. உப்பு - 1 ஸ்பூன்
      17. தேங்காய் துருவல் - 1 கப்
      செய்முறை :
      1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
      2. பொடியாக நறுக்கிய  வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
      3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
      4. பின் தக்காளி சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூள் ,உப்பு சேர்த்து வதக்கி அதில் மட்டன் சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
      5. பின் குக்கரை மூடி 6 விசில் விடவும்.
      6. குக்கரை திறந்து பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை அதில் சேர்க்கவும் நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி பூரி,சாதத்துடன் பரிமாறவும்.



      கொத்து பரோட்டா



      தேவையான பொருட்கள் :

      • பரோட்டா -3
      • முட்டை - 2
      • வெங்காயம் -2
      • தக்காளி -1
      • கொத்தமல்லி - சிறிதளவு
      • உப்பு -2 ஸ்பூன்
      • எண்ணெய் -4 ஸ்பூன்
      • இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
      • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
      • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
      • கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
      • தனியா தூள் - 1/2 ஸ்பூன்

      செய்முறை :

      1. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
      2. பின் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
      3. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் கரம் மசாலா,மஞ்சள்தூள், மிளகாய் தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் முட்டை உடைத்து ஊற்றி கிளறவும்.
      4. முட்டை பாதி வெந்ததும் தொக்கு போன்ற பதத்தில் வெட்டி வைத்த பரோட்டா துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.
      5. பின் கொத்தமல்லி தூவி சூடாக தயிர் ரைத்தாவுடன் பரிமாறவும்.

      மஷ்ரூம் ப்ரை

      தேவையான பொருட்கள் :

      1. மஷ்ரூம் - 8
      2. வெங்காயம் - 1
      3. இஞ்சிபூண்டு - 1 ஸ்பூன்
      4. மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
      5. தனியாதூள் - 1/2ஸ்பூன்
      6. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
      7. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
      8. உப்பு - 3/4ஸ்பூன்
      9. மிளகுதூள் - 1/2ஸ்பூன்
      10. எண்ணெய்- 1ஸ்பூன்


      செய்முறை :
      1. முதலில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
      2. பின் அதில் மஷ்ரூம் போட்டு வதக்கி அதில் மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.
      3. சிறிய தீயில் மூடி போட்டு வதக்கவும்.வெந்ததும் மிளகு தூள் போட்டு வறுத்து எடுக்கவும்.



      மீன் பிரியாணி

      தேவையான பொருட்கள் :


      1. பெரிய மீன் -6 துண்டுகள்
      2. பாசுமதி அரிசி - 3 கப்
      3. வெங்காயம் -2
      4. தக்காளி -1
      5. பச்சைமிளகாய்-2
      6. கொத்தமல்லி - சிறிது
      7. புதினா - சிறிது
      8. இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
      9. மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
      10. தனியாதூள் -3 ஸ்பூன்
      11. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
      12. பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
      13. எண்ணெய் - 6 ஸ்பூன்
      14. பட்டை - 2

      15. கிராம்பு - 2
      16. ஏலக்காய் - 2
      17. பிரியாணி இலை - 2
      18. உப்பு - 3 ஸ்பூன்


      செய்முறை :


      1. முதலில் ஒரு பாத்தரத்தில் மிளகாய் தூள் , தனியா தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள்  தூள் - 1/2 ஸ்பூன், இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்,உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் உறவிடவும்.
      2. பின்பு அதை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மீன்களை வறுத்து எடுக்கவும்.
      3. பின் இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் உற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிந்ததும் அதில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
      4. வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
      5. பின் அதில் தக்காளி போட்டு வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
      6. 10 நிமிடம் களித்து அதில் வருத்த மீன் துண்டுகளை போட்டு, மீன் உடையாமல் கிளறி விடவும்.
      7. பின் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு காற்று போகாத மூடி போட்டு மூடிவைக்கவும்.
      8. தம் முறையில் அரை மணி நேரம் பிறகு மீன் உடையாமல் கிளறவும்.

      குறிப்பு :

      தம் முறை : ஒரு தவா சூடு பண்ணி அதை சிறிய தீயில் வைத்து அதன் மேல் மூடிய பிரியாணி பாத்திரத்தை வைக்கவும்.

      மீன் ரோஸ்ட்

      தேவையான பொருட்கள்:

      1. மீன் - 4 துண்டுகள்
      2. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
      3. எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
      4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
      5. தனியாதூள் - 1 ஸ்பூன்
      6. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
      7. எண்ணெய் - 3 ஸ்பூன்
      8. உப்பு - 1 ஸ்பூன்


      செய்முறை :

      1. ஒரு பாத்திரத்தில் மீனை தவிர அனைத்து பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும்.
      2. மீன் துண்டுகளை, பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
      3. பின்பு ஒரு தவாவில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு சிறு தீயில் வருத்து எடுக்கவும்.