Pages

பாலக் பனீர்


    தேவையான பொருட்கள் :
    1. பாலக் கீரை - 2 கப்
    2. பனீர் - 100 கிராம்
    3. பால் - 1/2 கப் அல்லது கிரீம்-1 /4 கப்
    4. வெங்காயம் - 1
    5. தக்காளி - 1
    6. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 /2 ஸ்பூன்
    7. மஞ்சள் தூள் -1 /4ஸ்பூன்
    8. மிளகாய் தூள் -1 ஸ்பூன்
    9. தனியா தூள் -1 /2 ஸ்பூன்
    10. சீரகம் -1 /4ஸ்பூன்
    11. பட்டை , கிராம்பு- 2
    12. கஸ்துரி மேத்தி -1 /2ஸ்பூன்
    13. எண்ணெய்- 2 ஸ்பூன்
    14. பட்டர் - 2 ஸ்பூன்
    15. உப்பு - 1 ஸ்பூன்

    செய்முறை :

    1. ஒரு பாத்திரத்தில்தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் 2 - 3 நிமிடங்கள் பாலக் கீரை வேக வைத்து கொள்ளவும். பின்னர் ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
    2. பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பனீர் துண்டுகளை போட்டு வறுத்து கொள்ளவும் அல்லது பனீர் துண்டுகளை அப்படியே போடலாம்.
    3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய், பட்டர் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு ,சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
    5. தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தனியாதூள், உப்பு போட்டு அரைத்து வைத்த பாலக் கீரை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    6. 5 நிமிடம் பின் அதில் பனீர், பால் அல்லது கிரீம் ,கஸ்துரி மேத்தி சேர்த்து கொதிக்க விடவும். சாப்பாத்தியுடன் பரிமாறவும் .

    0 comments:

    Post a Comment