Pages

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

  1. உருளைக்கிழங்கு-2
  2. வெங்காயம்-1
  3. பச்சைமிளகாய்-2
  4. மிளகு-1/2ஸ்பூன்
  5. கருவேப்பிலை-சிறிது
  6. கடுகு-1/4ஸ்பூன்
  7. உள்ளுதம்பருப்பு-1/2ஸ்பூன்
  8. பூண்டு-2 பல்
  9. கொத்தமல்லி-சிறிது
  10. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
  11. உப்பு-3/4ஸ்பூன்
செய்முறை:
  1. உருளைகிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடிதாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அதில் தட்டி வைத்த பூண்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி, மசித்துவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
  4. உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

முட்டை கோஸ் பொடிமாஸ்


தேவையான பொருட்கள்:

  1. கோஸ்-2 கப்
  2. வெங்காயம்-1
  3. கடுகு-1/4ஸ்பூன்
  4. உள்ளுதம்பருப்பு-1/2ஸ்பூன்
  5. கடலைபருப்பு-1/2ஸ்பூன்
  6. சீரகம்-1/4ஸ்பூன்
  7. முட்டை-2
  8. உப்பு-1/2ஸ்பூன்
  9. எண்ணெய்-2ஸ்பூன்
  10. கொத்தமல்லி-சிறிது
  11. கருவேப்பிலை-சிறிது
வறுத்து அரைக்க:
  1. க.மிளகாய்-3
  2. உள்ளுதம்பருப்பு-1 ஸ்பூன்
செய்முறை:
  1. கடாயில் க.மிளகாய்,உள்ளுதம்பருப்பு சேர்த்து வறுத்து பொடித்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ் சேர்த்து வதக்கவும்.
  4. பாதி வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள்,பொடித்த பொடி சேர்த்து வதக்கவும்.
  5. அதில் முட்டை சேர்த்து வதக்கவும்.முட்டை நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.முட்டை கோஸ் பொடிமாஸ் ரெடி.

கிரில் சிக்கன்

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன்-8(Medium size pieces)
  2. மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
  3. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
  4. தந்துரிமசாலா-1 1/2 ஸ்பூன்
  5. கேசரி கலர்-சிறிது
  6. உப்பு-1ஸ்பூன்
  7. தயிர்-2 ஸ்பூன்
  8. எண்ணெய்- 2ஸ்பூன்
செய்முறை:
  1. சிக்கனை சுத்தம் செய்து மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தந்துரிமசாலா,உப்பு , தயிர்,எண்ணெய்,கேசரிகலர் சேர்த்து நன்கு பிசறி 5 மணிநேரம் ஊறவிடவும்.
  2. பின் க்ரில்லரை 350 டிகிரி சூடு செய்து ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வேகவிடவும்.
  3. வெந்ததும் அதனுடன் கிரில் செய்த வெங்காயம் ,எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

பிசிபெலாபாத்


தேவையான பொருட்கள் :

  1. சாதம் - 1 1/2 கப்
  2. துவரம் பருப்பு - 3/4 கப்
  3. கத்தரிக்காய் - 1
  4. காரட் - 1
  5. முருங்கைகாய் - 1
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  7. க. மிளகாய் - 6
  8. கடுகு - 2 ஸ்பூன்
  9. கருவேப்பில்லை - சிறிது
  10. கொத்தமல்லி -சிறிது
  11. புளி- சிறிய உருண்டை
  12. நெய் - சிறிது
  13. உப்பு - 2 ஸ்பூன்

அரைக்க :


  1. வெந்தயம் - 1ஸ்பூன்
  2. மல்லி தூள் -1ஸ்பூன்
  3. மிளகாய் தூள் -1 1/2ஸ்பூன்
  4. துருவிய தேங்காய் -4ஸ்பூன்
  5. ஏலக்காய் - 2
  6. கிராம்பு -4
  7. கசகசா - 1ஸ்பூன்
  8. பட்டை - சிறிய துண்டு


செய்முறை :



  1. பிரஷர் கூகரில் அரிசி, பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம்,காய், எண்ணெய்,  4 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில்விடவும்.
  2. ஒரு கடாய் வைத்து எண்ணெய் உற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, துருவிய தேங்காய், கசகசா, வெந்தயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.
  3. இன்னொரு கடாய் வைத்து 5 ஸ்பூன் எண்ணெய் உற்றி கடுகு, க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் அத்துடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, புளி சாரு மற்றும் அரைத்து வைத்த மசாலாவுடன் 2 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  5. கொதித்ததும் வேகவைத்த அரிசி பருப்பு கலவை சேர்த்து கிளறவும்.
  6. நன்கு கிளறியதும் அதனுடன் நெய் சேர்த்து பரிமாறவும்.
  7. இதை உருளைகிழங்கு வறுவலுடன் சாபிட்டால் சூப்பர்.









கருவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்:
  1. கருவேப்பிலை-2 கப்
  2. உள்ளுதம்பருப்பு-1/4 கப்
  3. கடலைபருப்பு-2 ஸ்பூன்
  4. க.மிளகாய்-5
  5. பூண்டு-1 பல்
  6. உப்பு-3/4 ஸ்பூன்


செய்முறை :

  1. கருவேப்பிலை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துகொள்ளவும்.
  2. நன்கு வறுத்ததும் ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.பின் அதே கடாயில் உள்ளுதம்பருப்பு,கடலைபருப்பு,க.மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
  3. வறுத்ததும் நன்கு ஆறவைத்து கொள்ளவும்.
  4. மிக்ஸ்யில் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.பின் வறுத்துவைத்த பருப்பு,க.மிளகாய்,உப்பு,பூண்டு சேர்த்து அரைக்கவும்.
  5. கருவேப்பிலை பொடி ரெடி.இட்லி,தோசை,சூடான சாதத்துடன் சாபிடலாம்.

லெமன் ரசம்

தேவையான பொருட்கள்:
  1. தக்காளி- 2
  2. எலுமிச்சை -1
  3. பூண்டு - 3 பல்
  4. ரசப் பொடி-1/2 ஸ்பூன்
  5. சீரகம்-1/2 ஸ்பூன்
  6. மிளகு- 1/2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி-சிறிது
  8. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
  9. உப்பு - 3/4 ஸ்பூன்
  10. வேகவைத்த பருப்பு - 1/4 கப்
  11. எண்ணெய்-1ஸ்பூன்
  12. கடுகு -1/4 ஸ்பூன்
  13. காய்ந்த மிளகாய் - 2
  14. கறிவேப்பிலை -சிறிது
  15. பெருங்காயதூள்-சிறிது
செய்முறை:

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்ததும்,சீரகம்,மிளகு,பூண்டுஅரைத்து சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதில் மசித்துவைத்த தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, ரசபொடி, வேகவைத்த பருப்பு,பெருங்காயதூள் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைசாறு வைத்து அதில் ரசத்தை ஊற்றி கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான லெமன் ரசம் ரெடி.
குறிப்பு:

ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடகூடாது

மூளை வறுவல்


      தேவையான பொருட்கள்:
      1. மூளை - 2
      2. வெங்காயம் - 1
      3. இஞ்சிபூண்டுபேஸ்ட்-1 ஸ்பூன்
      4. தக்காளி-1
      5. மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
      6. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
      7. மிளகாய்த்தூள்- 1/2 ஸ்பூன்
      8. தனியாதூள்- 1 ஸ்பூன்
      9. கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
      10. எண்ணெய் -5ஸ்பூன்
      11. உப்பு - 1 ஸ்பூன்
      12. கொத்தமல்லி-சிறிது
      செய்முறை:
      1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
      2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டுபேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
      3. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
      4. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
      5. பின் அதில் நன்கு சுத்தம் செய்த மூளையை சேர்த்து வேகவிடவும்.பாதி வெந்ததும் மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறவும்.
      6. சிறு தீயில் வைத்து 2 ஸ்பூன்எண்ணெய் விட்டு நன்கு சுருள வறுக்கவும்.
      7. மூளைவறுவல் ரெடியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
      குறிப்பு:

      குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.அவர்களுக்கு சாப்பிட எளிதாக இருக்கும்.

      வெந்தய கீரை பருப்பு கிரேவி

      வெந்தய கீரைகள் சிறந்த செரிமானம் திறன்களை கொண்ட உணவு.நீங்கள் வெந்தய கீரை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகள் வராது.வெந்தய கீரை மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

      தேவையான பொருட்கள்:
      1. வெந்தய கீரை - 1கட்டு
      2. துவரம்பருப்பு - 1/2 கப்
      3. சிறுபருப்பு - 1/4 கப்
      4. வெங்காயம்-1
      5. பூண்டு-5 பல்
      6. கடுகு-1/4 ஸ்பூன்
      7. உள்ளுதம்பருப்பு-1/4ஸ்பூன்
      8. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
      9. பச்சைமிளகாய்-2
      10. க.மிளகாய் - 2
      11. உப்பு-1 ஸ்பூன்
      12. பெருங்காயம் -சிறிது
      13. எண்ணெய் - 2 ஸ்பூன்
      செய்முறை :
      1. முதலில் பருப்பு,கீரை சுத்தம் செய்து கொள்ளவும்.
      2. அதை கூகேரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி,மஞ்சள்தூள்,3பல்பூண்டு, நறுக்கிய பாதி வெங்காயம் ,பச்சைமிளகாய் ,பெருங்காயம்,1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில்விடவும்.
      3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, க.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
      4. பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தட்டி வைத்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
      5. கூகர் சூடுஆறியதும் அதை எடுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும்.
      6. கடாயில் வெங்காயம் வதங்கியதும் அதை எடுத்து அரைத்து வைத்ததை சேர்த்து கலக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.


      பனீர் பட்டர் மசாலா

      ஹோட்டல் சுவைபோல வீட்டில் எளிதாக பனீர் பட்டர் மசாலா சமைக்கலாம் வாங்க
      தேவையான பொருட்கள் :



      1. பனீர் - 1 கப்
      2. பட்டர் - 1 ஸ்பூன்
      3. எண்ணெய் - 2 ஸ்பூன்
      4. கறிவேப்பிலை - சிறிதளவு
      5. வெங்காயம் -1
      6. தக்காளி - 1
      7. இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
      8. உப்பு - 1 ஸ்பூன்
      9. பால் - 1 கப்
      10. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
      11. தனியா தூள் - 1 ஸ்பூன்
      12. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
      13. கசுரி மேத்தி - 1/4 ஸ்பூன்(காய்ந்த வெந்தயகீரை)
      14. தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
      15. கொத்தமல்லி - சிறிதளவு

      செய்முறை:

      1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை ,சிறிதாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
      2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
      3. பின் அரைத்து வைத்த தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .
      4. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா , தக்காளி சாஸ், உப்பு கொஞ்சம் பால் சேர்த்து கட்டி படாமல் கலக்கவும்.
      5. தக்காளி போட்டு நன்கு வதங்கியதும் இந்த கலவையை அதில் போட்டு மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.
      6. பின் அதில் பனீர், கசுரி மேத்தி போட்டு நன்கு கொதிக்கவிடவும். தேவைபட்டாள் சிறிது சிவப்பு கேசரி கலர் சேர்க்கவும்.
      7. இதை சூடான naan, சப்பாத்தி உடன் பரிமாறவும்.