Pages

முந்தரி பகோடா

தேவையான பொருட்கள்:
  1. முந்திரி - 1 கப் 
  2. கடலை மாவு - 1/2 கப் 
  3. அரிசி மாவு - 2 டீஸ்பூன் 
  4. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
  5. நெய் - 2 டீஸ்பூன் 
  6. உப்பு - 1/2 ஸ்பூன் 
  7. எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
  1. முதலில் முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில்  போட்டு  பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி பகோடா ரெடி!!!

Stuffed கத்திரிக்காய்

                                            
தேவையான பொருட்கள்:
  1. கத்தரிக்காய்- 6
  2. வெங்காயம் - 1
  3. இஞ்சி - சிறிது
  4. பூண்டு - 5 பல்
  5. க.மிளகாய் - 5
  6. சோம்பு - 1 ஸ்பூன்
  7. சீரகம்-1/2 ஸ்பூன்
  8. தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
  9. கசகசா- 1/2 ஸ்பூன்
  10. பட்டை - 1
  11. கிராம்பு - 2
  12. எண்ணெய் - 5 ஸ்பூன்
  13. கடுகு - 1/4 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன்
செய்முறை:

  1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாயை எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
  2. அத்துடன் சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. கத்தரிக்காயை சுத்தம் செய்து மேலும் கீழும் சிறிது இடம் விட்டு கீறி அதில் அரைத்த விழுதை வைக்கவும்.
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,கத்தரிக்காயை போட்டு வதக்கி எடுத்தால் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி.

செட்டிநாடு வறுத்த சிக்கன்

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 2
  3. காய்ந்த மிளகாய் – 5
  4. சோம்பு – 1 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் – 2
  6. சின்ன வெங்காயம் –10
  7. தக்காளி – 1
  8. கறிவேப்பிலை-சிறிது
  9. கடலை மாவு – 1/2 கப்
  10. தேங்காய்- 1/2 கப்
  11. எண்ணெய்- 5 ஸ்பூன்
  12. உப்பு - 1 ஸ்பூன் 

செய்முறை:
  1. மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து நன்றாக அரைக்கவும். 
  2. சின்ன துண்டுகளாக வெட்டிவைத்த சிக்கனுடன்அரைத்துவிழுது,இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய் ஒரு ஸ்பூன்,உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள்,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் சற்று மொறு மொறுப்பாக ஆகும். 
  4. கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
  5. மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 
  6. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். 
  7. இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. 

கோதுமை அல்வா

                          

தேவையான பொருட்கள் :
  1. கோதுமைமாவு - 1/2 கப்
  2. சர்க்கரை - 1 கப்
  3. தண்ணீர் -2 கப் 
  4. நெய் - 5 ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன் 
  6. முந்திரி பருப்பு - 5
  7. கேசரி கலர் பொடி - சிறிது 

செய்முறை :

  1. கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவை போல பிசைந்து கொள்ளவும்.
  2. பின் அதை சிறிது சூடான தண்ணீரில் போட்டு 5-7 மணி நேரம் ஊறவிடவும்.
  3. கோதுமை கலவையை கலக்கி வடிதட்டில் ஊற்றி திப்பியை எடுத்து விடவும்.
  4. Nonstick பாத்திரத்தில் சக்கரை, 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.
  5. கோதுமை கலவையின் மேல் தெளிந்து இருக்கும் தண்ணீரை முடிந்தவரை எடுத்து விடவும்.
  6. சக்கரை பாகு போல வந்ததும் கேசரி கலர்,கலந்து வைத்த கோதுமை கலவையை சேர்த்து கிளறவும்.
  7. பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  8. நெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த முந்தரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறினால் கோதுமை அல்வா ரெடி.

ரிப்பன் பகோடா




    தேவையான பொருட்கள்:                                                                   

    1. கடலைமாவு - 2 கப்
    2. அரிசி மாவு - 1 கப்
    3. மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    4. பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்
    5. எண்ணெய் -பொரிக்க
    6. உப்பு - 1 ஸ்பூன்

    செய்முறை :



    1. கடலைமாவையும், அரிசிமாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்தூள், பெருங்காயப்பொடி, உப்பு, 3 ஸ்பூன் சூடான எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பிசையவும்.



    2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை அச்சில் வைத்து, பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.ரிப்பன் பகோடா ரெடி.