Pages

கடாய் பனீர் 2

தேவையான பொருட்கள்:
  1. பன்னீர் - 1 கப் 
  2. வெங்காயம்-1
  3. கொடமிளகாய் - 1
  4. இஞ்சி-சிறிது 
  5. பூண்டு- 2 பல் 
  6. மிளகு-1 ஸ்பூன் 
  7. தனியா - 1 ஸ்பூன் 
  8. மிளகாய்-3
  9. பட்டை-1
  10. கிராம்பு-3
  11. ஏலக்காய்-2
  12. சீரகம்-1/2 ஸ்பூன் 
  13. சோம்பு-1/2 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன் 
  15. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன் 
  16. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  17. எண்ணெய் -5 ஸ்பூன்
செய்முறை:
  1. கடாயில் மிளகு,தனியா,மிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம், சோம்பு வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் உற்றி சிறிய பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சதுர வடிவில் வெட்டிவைத்த வெங்காயம்,கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்,பின் அதில் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  6. பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.

மீல் மேக்கர் குருமா

தேவையான பொருட்கள் :
  1. மீல் மேக்கர் - 1 கப் 
  2. வெங்காயம் - 1 
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
  5. பச்சை மிளகாய் - 2
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் 
  8. தனியா தூள் - 1/2 ஸ்பூன் 
  9. சீரக தூள்  - 1/2 ஸ்பூன் 
  10. கரம் மசாலா - 1/2 ஸ்பூன் 
  11. தேங்காய் பால் - 1/2 கப் 
  12. உப்பு - 3/4 ஸ்பூன்  
  13. எண்ணெய் - 4 ஸ்பூன் 
  14. கொத்தமல்லி - சிறிது 
செய்முறை: 

  1. முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
  5. பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.


காரட் சாதம்

தேவையான பொருட்கள்:


  1. காரட் -5
  2. பாஸ்மதி அரிசி-1 கப் 
  3. பட்டை-1
  4. கிராம்பு-3
  5. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-3/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  8. வெங்காயம் -1
  9. உப்பு-1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
  1. பாஸ்மதி அரிசியை நன்கு ஒட்டாத படி சாதமாக வடித்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு சேர்த்து வதக்கவும் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் அதில் உப்பு , கரம் மசாலா, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்துகொள்ளவும்)
  5. பின் அதில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால் காரட் சாதம் ரெடி.

தேங்காய் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:


  1. துருவிய தேங்காய் - 1/2 கப் 
  2. தக்காளி - 2
  3. வெங்காயம் - 1
  4. கடலைபருப்பு - 2 ஸ்பூன் 
  5. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
  6. கடுகு - 1 ஸ்பூன் 
  7. இஞ்சி - 1 துண்டு 
  8. பூண்டு - 3 பல் 
  9. காய்ந்த மிளகாய் - 3
  10. கறிவேப்பிலை - சிறிது 
  11. எண்ணெய் - 3 ஸ்பூன் 
  12. உப்பு - 3/4 ஸ்பூன்

செய்முறை: 

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வருக்க  வேண்டும். பின் அதில் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும் 
  2. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.
  4. நன்கு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். 
  5. பின் கடாயில்  2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றவும்.சுவையான தேங்காய் தக்காளி சட்னி தயார்.


கிரிஸ்பி பிரொக்கோலி

தேவையான பொருட்கள் :

  1. பிரொக்கோலி -1 கப் 
  2. உப்பு - சிறிது 
  3. மிளகு தூள்-1/4 ஸ்பூன் 
  4. பூண்டு-2 பல் 
  5. ஒலிவ்(Olive)எண்ணெய் -1 ஸ்பூன் 
செய்முறை :

  1. பிரொக்கோலி சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. பின் அதில் உப்பு, மிளகு தூள்,எண்ணெய் , பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பின் அதை ஓவனில்(oven) 10 நிமிடம் வைத்து bake செய்து எடுத்தால் கிரிஸ்பி பிரொக்கோலி தயார்.

பேபி உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்: 

  1. பேபி உருளைக்கிழங்கு - 8
  2. பச்சை மிளகாய் - 2 
  3. வெங்காயம் - 2 
  4. தக்காளி - 1 
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  7. மல்லி தூள் - 1 ஸ்பூன் 
  8. கரம் மசாலா - 1 1/4 ஸ்பூன்  
  9. சீரகம் - 1/2 ஸ்பூன் 
  10. உப்பு -1 ஸ்பூன்  
  11. எண்ணெய் - 4 ஸ்பூன் 
செய்முறை: 

  1. முதலில் பேபி உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துகொள்ளவும்  
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  3. பின் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 
  4. உருளைக்கிழங்கானது நன்கு பொன்னிறமானதும், தீயை குறைத்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் 
  5. பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் முதலில் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். 
  6. பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் கிளற வேண்டும். 
  7. பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் சேரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.